December 14, 2015

நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர், கணக்குத்துறை அதிகாரி பணி

 
மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 159 பொறியாளர் மற்றும் கணக்குத் துறை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
காலியிடங்கள்: 149
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
கெமிக்கல் - 72
மெக்கானிக்கல் - 42
எலக்ட்ரிக்கல் - 25
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இண்ஸ்ட்ரூமெண்டேசன் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கணக்கு துறை அதிகாரி
காலியிடங்கள்: 10
தகுதி: சார்டர்டு அக்கவுண்ட், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட், எம்.எப்.ஏ. நிதியில் மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 ஆம் தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-->

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...