July 26, 2018

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்ப

இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பின்றி இருந்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு  உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் திறன்வளர்ப்பு பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடத்தப்பட இருக்கிறது.

இம்முகாமில் பிரசித்திப் பெற்ற தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம்பெற்றவர்கள் அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.

எனவே, கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...