April 2, 2016

தமிழ்நாடு மின் நிறுவனத்தின் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு மின் நிறுவனத்தின் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஒத்திவைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வரும் 3-ஆம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு மே மாதம் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள தொழில்நுட்ப உதவியாளர் - 525, உதவி வரைவாளர் - 50, கள உதவியாளர் (பயிற்சி) - 900 பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வருகின்ற 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்து தேர்வு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் 22.05.2016 அன்று ஒத்திவைக்கப்படுகிறது.

மற்ற நிபந்தனைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...