December 17, 2015

தமிழ்நாடு தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழகத்தில் (ESIC) காலியாக உள்ள 395 Upper Division Clerk , Multi Tasking Staff பணியிடங்கள்

தமிழ்நாடு தொழிலாளர்களின் அரசு ஈட்டுறுதி கழகத்தில் (ESIC) காலியாக உள்ள 395 Upper Division Clerk , Multi Tasking Staff பணியிடங்களை வழக்கமான அடிப்படையில் நேரடி பணி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 395

பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 202 + 20 + 6

தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff

காலியிடங்கள்: 193 + 19 + 5

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 வழங்கப்படும்.

வயது வரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.esichennai.org அல்லது www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ESIC ஊழியர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://esichennai.org/rochennai/Advt%20-UDC%20-%20MTS-%20ROTN-041215.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

BANK EXAM

பிரபலமானவை! அப்படினா?

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB BANK) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அற...